search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்பு அகற்றம்"

    • பெரியார் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • இதனால் பஸ் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

    மதுரை

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் பெரியார் பஸ் நிலையம் புதிதாக கட்டப்பட்டு அதன் ஒரு பகுதி பயன்பாட்டில் உள்ளன.

    புதிய பஸ் நிலையத்தில் உள்ள பிளாட் பாரங்களில் பழக்கடை உள்ளிட்டவற்றை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.

    மேலும் இந்த கடைகள் மூலம் குப்பைகளும் அதிக ரித்தது. இதனால் சுகாதார சீர்கேடும், பயணிகளுக்கு தொந்தரவும் ஏற்பட்டது.

    இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இன்று பஸ் நிலையத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்த பழக்கடைகளை அகற்ற முற்பட்டனர்.

    அப்போது வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் பஸ் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

    • போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் நடவடிக்கை
    • நோட்டீஸ் அளித்து காலஅவகாசம் அளித்தனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் கோட்டை மைதானம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தது.

    ஆக்கிரமிப்பு அகற்றம்

    இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுவதால் கோட்டை மைதானம் சுற்றியுள்ள அரசு அலுவலங்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

    இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.

    ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி மற்றும் ஆரணி வருவாய் துறையினர் ஏற்கனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அளித்து காலஅவகாசம் வழங்கினார்கள்.

    இதனையடுத்து நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி தாசில்தார் ஜெகதீசன் ஆகியோர் தலைமையில் கோட்டை வீதி பேருந்து நிலையங்கள் செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள்.

    ஆரணி முக்கிய வீதிகளான பேருந்து நிலையங்கள் மற்றும் கோட்டை வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • முக்கல் நாயக்கன் பட்டிக்கு பேருந்து இயக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    • வழியில் வேடியப்பன் திட்டு, குளியனூர் திருப்பம் உள்ளிட்ட இடங்களில் பஸ் செல்வதற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லின் மூலம் அகற்றப்பட்டன.

    தருமபுரி, 

    தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இருந்து ஏ,கொள்ளஅள்ளி வழியாக முக்கல் நாயக்கன் பட்டிக்கு பேருந்து இயக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் அந்த வழித்தடத்தில் இன்று சோதனை ஓட்டம் நடந்தது.

    இதில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. ஆர்.டி.ஓ. தாமோதரன், தாசில்தார் ராஜராஜன், நகராட்சி ஆணையர் சித்ரா, போக்குவரத்து கழக போது மேலாளர் ஜீவரத்தினம், அதிகாரிகள் மோகன்குமார், தமிழரசன், தருமபுரி கிளை மேலாளர் செல்வராஜ், ஊராட்சி தலைவர் வேடியப்பன், ஒன்றிய கவுன்சிலர் இந்துபெருமாள்சாமி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜெய்சங்கர், தாமரைசெல்வி , தருமபுரி பி.டி.ஓ.க்கள் கணேசன், தனபால் உள்ளிட்டோர் அந்த பஸ்சில் பயணம் செய்தனர்.

    வழியில் வேடியப்பன் திட்டு, குளியனூர் திருப்பம் உள்ளிட்ட இடங்களில் பஸ் செல்வதற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லின் மூலம் அகற்றப்பட்டன.

    இனி இந்த வழித்தடத்தில் தொடர்ந்து பேருந்து இயக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    • அதிகாரிகள் பலமுறை அகற்றும்படி எச்சரித்தும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
    • பொக்லைன் வைத்து ஆக்கிரமிப்பு கட்டுமானம் மற்றும் குடில்களை இடித்து தள்ளினர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கடற்கரையோரம் அரசுக்கு சொந்தமான 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 40 சென்ட் நிலத்தை அப்பகுதியில், கெஸ்ட் அவுஸ் நடத்தும் சென்னையை சேர்ந்த நபர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். வருவாய்த்துறை அதிகாரிகள் பலமுறை அகற்றும்படி எச்சரித்தும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.

    இந்நிலையில் அங்கு கட்டுமானம் கட்டப்பட்டு, குடில் போட்டிருப்பதாக தகவலரிந்த திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், வருவாய் ஆய்வாளர் ரகு, வி.ஏ.ஓ முனுசாமி உள்ளிட்ட அதிகாரிகள் இன்று மதியம் அங்கு சென்று, பொக்லைன் வைத்து ஆக்கிரமிப்பு கட்டுமானம் மற்றும் குடில்களை இடித்து தள்ளினர். மின் இணைப்பு இருந்ததையும் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு கானப்பட்டது.

    • தனிப்பிரிவு மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது.
    • இருப்பினும், முழுவதுமாக அகற்றவில்லை எனத் தெரிகிறது.

    மங்கலம்பேட்டை, நவ.24-

    விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையில், விருத்தாசலம்-உளுந்தூ ர்பேட்டை மெயின் ரோடு (எஸ்.எச்.69 மாநில நெடு ஞ்சாலை) மற்றும் கடை வீதியில் 100-க்கும் மேற்ப ட்ட வீடு மற்றும் கடைகள் உள்ளன. இவற்றிற்கு முன்புற பகுதிளில், அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து பல கட்டிடங்கள் கட்டப்பட்டி ருப்பதாகவும், இங்குள்ள கடை மற்றும் வணிக நிறுவ னங்களின் முன்புற பகுதி களில் தகர ஷீட்டு களால் ஷெட்டுகள், கொட்ட கைகள் அமைத்து பலர் ஆக்கிரமிப்பு செய்திரு ப்பதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்தில் சிக்கிக் கொண்டவர்கள், உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் உரிய நேரத்திற்குள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு முடியாமலும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட வழியில்லாமல் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால், மங்கல ம்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கூறி, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், விருத்தா சலம் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அலுலகம் சார்பில், கடந்த அக்டோபர் மாதம் இறுதியில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், விருத்தாசலம் நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட விருத்தாசலம்- உளுந்தூ ர்பேட்டை-விழுப்புரம் சாலையில், மங்கலம்பேட்டை மாநில நெடுஞ்சாலை எண்:69-ல், 13/4 முதல் 16/6 கி.மீ., வரை உள்ள ஆக்கிரமிப்பினை தாங்களாகவே முன்வந்து 15.11.2022 அன்று மாலை 6 மணிக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். தவறினால் நெடுஞ்சாலைத் துறை மூலம் 16.11.2022 காலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். இதனால் ஏற்படும் எவ்விதமான இழப்பீடுகளுக்கும் நெடுஞ்சாலைத் துறை பொறுப்பேற்காது என்று கூறப்பட்டிருந்தது. இதனால், கடை மற்றும் வீடுகளின் முன்பு போடப்பட்டிருந்த தகர ஷீட் ஷெட்டுகள் மற்றும் கொட்டகைகளை பலர் தாங்களாகவே முன் வந்து அகற்றிக் கொண்டனர்.

    இருப்பினும், முழுவதுமாக அகற்றவில்லை எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை கடலூர் கோட்டப் பொறியாளர் பரந்தாமன் உத்தரவின்பேரில், விரு த்தாசலம் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் அறிவு க்களஞ்சியம், அப்போது, நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் விவேகானந்தன், சாலை ஆய்வாளர்கள் அருணகிரி, விமலாராணி, ராணி ஆகியோர் தலைமையிலான நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் நேற்று காலை மங்கலம்பேட்டை மெயின் ரோடு, கடைவீதி ஆகிய பகுதிகளில் ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணியி னை மேற்கொண்டனர். இந்தப் பணியின்போது, மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரே பொன்னியம்மன் கோவில் தெரு, போஸ்கோ நகர், தண்டபாணி கோவில் தெரு உள்ளிட்ட பெரிய ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 113 ஏக்டர் பரப்பில் கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகள் என ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன.

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டி டங்களை இடித்து அப்புறப்படுத்த சென்னை ஜகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகம் எதிரே இருந்த நீர்ப்பிடிப்பு ஆக்கிரமிப்பு கடை அகற்ற முயன்ற போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 7 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தை நடத்தியதில் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதிக்கு பிறகு அப்புறப்படுத்த முடிவெடுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிப்பு கடை களை அகற்றுவது குறித்து போராட்டக் குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    அப்போது குடியிருப்பு வீடுகளை தவிர்த்து வணிகரீதியான நிறுவனங்கள் மற்றும் கடைகளை சனிக்கிழமை அப்புறப்படுத்திக்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் முழு சம்மதம் தெரிவித்தனர்.

    அதனை தொடர்ந்து நேற்று பொதுப்பணித்துறை நீர்வளத்துறை மூலம் 5 பொக்லைன் எந்திரம் மூலம் வருவாய்த்துறையினனர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    அப்போது போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கலெக்டர் தகவல்
    • ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கை களை முன்வைத்தனர்:-

    பல்வேறு இடங்களில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது.

    நீர்நிலை ஆக்கிரமிப்புகள் பாகுபாடு இன்றி அகற்றப்பட்டு, இடங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது, தொடர்ந்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகவே இதில் எவ்வித பிரச்சனைகளும் இல்லை.‌ இது போன்ற பிரச்சனைகளை விவசாயிகள் மனுக்களாக வழங்கலாம் என்றார்.

    தொடர்ந்து விவசாயிகள் பேசியதாவது:-

    சீக்கராஜபுரம், வடகால் பொன்னை ஆற்றுக்கால்வாயில் ஆக்கிரம்புகள் உள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக பொன்னையாற்றில் தண்ணீர் சென்றும், வடகால் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை.

    பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் இதுவரையில் ஆழ்துளை போடப்பட்டு பல விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட வில்லை.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் எதிர்வரும் சம்பா பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் எவ்வித அரசியல் தலையிடும் இல்லாமல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

    கடன் சங்கங்களில் விவசாயிகள் 6 மாதத்திற்கான பயிர் கடன்கள் வருகின்றனர்.இதனை ஒரு வருட பயிர் கடன் வழங்கும் நடைமுறையாக செயல்ப டுத்தினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் பிரச்சனைகள் விளை பொருட்கள் நாசமாகிறது. இப்பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. காட்டுப் பன்றிகளை சுட அரசு உத்தரவிட்டும், வனத்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்றனர்.

    • ரிஷிவந்தியத்தில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • கால்வாயை தூர்வார முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஷிவந்தியம் வடக்கு தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்றதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இந்த நிலையில் கழிவு நீர் கால்வாயை ஆக்கிரமித்து சிலர் சிமெண்டு சிலாப் மூலம் மூடி பயன்படுத்தி வந்தனர். இதனால் கால்வாயை தூர்வார முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

    இதையடுத்து ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் வினிதா மற்றும் அதிகாரிகள் வடக்கு தெருபகுதிக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி பொக்லைன் எந்திரம் உதவியுடன் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சிமெண்டு சிலாப்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கியது.

    • மழையால் பாதிப்பு ஏற்பட ஏரிகள் மற்றும் கால்வாய் நிலங்கள் ஆக்கிரமிப்பே முக்கிய காரணம் என்பது தெரியவந்தது.
    • ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக மகாதேவபுரா, மாரத்தஹள்ளி, பெல்லந்தூர், கே.ஆர்.புரம், சர்ஜாப்புரா உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக 130-க்கும் மேற்பட்ட லே-அவுட்டுகள், 20-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி நின்றது. மழையால் பாதிப்பு ஏற்பட ஏரிகள் மற்றும் கால்வாய் நிலங்கள் ஆக்கிரமிப்பே முக்கிய காரணம் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து, ஏரி, கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள், கட்டிடங்களை இடித்து அகற்ற அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். அதன்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

    மேலும், பெங்களூருவில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள ஐ.டி. நிறுவனங்களின் கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, விப்ரோ, பிரஸ்டீஜ், எகோ ஸ்பேஸ் உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் பல்வேறு முக்கிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    அடுத்த பருவமழை தொடங்குவதற்குள் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் அசோக் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 12-ந் தேதி பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து ஆகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவுப்படி தான் வீடுகளை இடிந்து அகற்றி வருகிறோம் என தெரிவித்தனர்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள நரியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான வாய்க்கால் நீர் நிலை பகுதியில் 64 வீடுகள் கட்டப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டு இருந்த வீடுகளை அகற்ற அதிகாரிகள் சார்பில் குடியிருப்புவாசிகளுக்கு சில மாதங்களுக்கு முன் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து ஆகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளை இடித்து அகற்ற குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ., குன்றத்தூர் தாசில்தார், குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதற்கு அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவுப்படி தான் வீடுகளை இடிந்து அகற்றி வருகிறோம் என தெரிவித்தனர். இதன் தொடர்ந்து 54 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இந்த நிலையில் இடிக்கப்படாமல் இருந்த 10 வீடுகளை நேற்று இடித்து அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. சைலேந்திரன், குன்றத்தூர் தாசில்தார் கல்யாணசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், கண்ணன், மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரி கேள்வி எழுப்பினர். ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    • விருத்தாசலத்தில் நீர்நிைலகளில் ஆக்கிரமிக்கப்பட்ட வீடு-கடைகள் அகற்றப்பட்டது.
    • காவல் உதவி கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான காவலர்கள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட ஆலடி ரோட்டில் உள்ள நீர் ஓடையை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டுகளாக வீடு மற்றும் கடைகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின் பேரில், அதனை நிறைவேற்றும் வகையில் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் தனபதி தலைமையிலான குழுவினர் ஆக்கிரமிப்பில் இருந்த வீடு மற்றும் கடைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாழடைந்த ஒரு வீடு மற்றும் ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் ஆகியவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றம் செய்தனர். ஆக்கிரமிப்பு செய்யும் பணி அடுத்துவரும் நாட்களில் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு செய்யும் பணி நடைபெறுகையில் வட்டாட்சியரிடம் பெண்கள், வீடுகளை இடித்தால், தங்கள் வாழ்வா தாரம் பாதிக்கப்படும் எனவும்தங்களுக்கு போக்கிடம் இல்லை எனவும் கதறி அழுதனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில்நகராட்சி ஊழியர்கள், மின்சார ஊழியர்கள், வருவாய் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். காவல் உதவி கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான காவலர்கள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பழனி பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது
    • பழனி பஸ் நிலையம், ஆக்கிரமிப்பு அகற்றம்

    பழனி:

    பழனியில் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடைக்காரர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தை விட கூடுதலான இடத்தை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இது தவிர சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகள் போன்றவற்றால் நகருக்குள் நுைழய முடியாத நிலை உள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள், வழிப்பறி கொள்ளையர்கள் பக்தர்களிடம் பணம் பறிக்கும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    பணம் மற்றும் உடமைகளை பறிகொடுத்த பக்தர்கள் போலீஸ் நிலையங்களுக்கு செல்ல தயங்கி திரும்பிச் சென்று விடுகின்றனர். இதனால் கொள்ளையர்கள் தொடர்ந்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி வழிப்பறியில் ஈடுபடுவது நடந்து வருகிறது.

    இது தவிர சாலையோர குடிமகன்கள் ஆங்காங்கே மயங்கி கிடக்கும் நிலையும் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பு பகுதிகளை கண்டறிந்து அதனை அகற்ற நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    ஆணையாளர் கமலா உத்தரவின் பேரில் பொறியாளர் ெசல்வி மற்றும் போலீசார், போக்குவரத்து காவலர்கள் ஆகியோர் ஒவ்வொரு கடையாக சென்று ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்தனர்.

    அந்த கடைகளுக்கு முன்பு மஞ்சள் நிற குறியீடு வரைந்து இதைத் தாண்டி வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதிகளில் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    பஸ் நிலையத்தை ெதாடர்ந்து அனைத்து பகுதிகளிலும் இது போன்ற நடவடிக்கை தொடரும் என்று ஆணையாளர் கமலா தெரிவித்தார்.

    ×